என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா தொடங்கியது
Byமாலை மலர்20 Feb 2021 3:45 AM GMT (Updated: 20 Feb 2021 3:45 AM GMT)
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட்டில் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை நடக்கிறது. இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கிறது.
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட்டில் மறைசாட்சி தேவசகாயம் ஆலயம், புனித வியாகுல அன்னை ஆலயம் ஆகிய இரட்டை திருத்தலங்கள் உள்ளன. இதில் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை யொட்டி காலையில் திருப்பலியும், 11 மணிக்கு நவநாள் திருப்பலியும் நடைபெற்றது. குரும்பனை இணை பங்குத்தந்தை ஜேக்கப், மேல மணக்குடி இணை பங்குதந்தை ராய், இளங்குருமடம் புனித அலோசியஸ் வினட் மேக்சன் அருளுரை ஆற்றினார்கள்.
மதியம் 3 மணிக்கு திருவிழா வரவேற்பு மேளம் முழங்கியது. அதனைத் தொடர்ந்து கொடி நேர்ச்சையும் ஜெபமாலையும் புகழ் மாலையும் நடைபெற்றது. தொடர்ந்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்து கொடியேற்றப்பட்டது.
இதில் கோட்டார் மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமை உரையும், முட்டம் மறைவட்ட முதல்வர் ஜான் ரூபஸ் அருளுரையும் ஆற்றினர். கொடியேற்ற நிகழ்ச்சியில் தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், பங்கு பேரவை துணைத்தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாய மைக்கிள்ராஜ், துணைச் செயலாளர் சகாயரூபிலெட், பொருளாளர் சகாயபென்சிகர், அருட் சகோதரிகள், தேவசகாயம் மவுண்ட் வட்டார துணைத்தலைவர் ஜேக்கப் மனோகரன், மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கொடியேற்று விழா நிகழ்ச்சியின் போது சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டது.
விழாவையொட்டி தினமும் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை நடக்கிறது. இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கிறது. 8-ம் திருவிழா அன்று நற்கருணை பவனியும், 9-ம் திருவிழாஅன்று இரவு வாண வேடிக்கையும், அதனை தொடர்ந்து தேர்ப்பவனியும், 10-ம் திருவிழா அன்று மாலையில் தேர் பவனியும், இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. விழா ஏற்பாட்டை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள் செய்துள்ளனர்.
மதியம் 3 மணிக்கு திருவிழா வரவேற்பு மேளம் முழங்கியது. அதனைத் தொடர்ந்து கொடி நேர்ச்சையும் ஜெபமாலையும் புகழ் மாலையும் நடைபெற்றது. தொடர்ந்து மேள தாளங்களுடன் ஊர்வலமாக வந்து கொடியேற்றப்பட்டது.
இதில் கோட்டார் மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமை உரையும், முட்டம் மறைவட்ட முதல்வர் ஜான் ரூபஸ் அருளுரையும் ஆற்றினர். கொடியேற்ற நிகழ்ச்சியில் தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், பங்கு பேரவை துணைத்தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாய மைக்கிள்ராஜ், துணைச் செயலாளர் சகாயரூபிலெட், பொருளாளர் சகாயபென்சிகர், அருட் சகோதரிகள், தேவசகாயம் மவுண்ட் வட்டார துணைத்தலைவர் ஜேக்கப் மனோகரன், மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். கொடியேற்று விழா நிகழ்ச்சியின் போது சமாதான புறாக்கள் பறக்க விடப்பட்டது.
விழாவையொட்டி தினமும் திருப்பலி, ஜெபமாலை, புகழ்மாலை நடக்கிறது. இரவு கலை நிகழ்ச்சிகளும் நடக்க இருக்கிறது. 8-ம் திருவிழா அன்று நற்கருணை பவனியும், 9-ம் திருவிழாஅன்று இரவு வாண வேடிக்கையும், அதனை தொடர்ந்து தேர்ப்பவனியும், 10-ம் திருவிழா அன்று மாலையில் தேர் பவனியும், இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீரும் நடக்கிறது. விழா ஏற்பாட்டை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள் செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X