என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்18 Feb 2021 6:16 AM GMT (Updated: 18 Feb 2021 6:16 AM GMT)
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஆரல்வாய்மொழி, தேவசகாயம் மவுண்டில் புனித வியாகுல அன்னை ஆலயம், மறைசாட்சி தேவசகாயம் திருத்தலம் ஆகிய இரட்டை திருத்தலம் உள்ளது. இங்கே ஒவ்வொரு ஆண்டும் புனித வியாகுல அன்னை ஆலயம் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு திருப்பலி, 11 மணிக்கு நவநாள் திருப்பலி, மாலை 3 மணிக்கு திருவிழா வரவேற்பு மேளம், தொடர்ந்து கொடி நேர்ச்சை, ஜெபமாலை, இரவு 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடக்கிறது. கோட்டார் மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமை தாங்குகிறார். முட்டம் மறைமாவட்ட முதல்வர் ஜாண்ரூபஸ் மறையுரை நிகழ்த்துகிறார்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு முதல்திருவிருந்து திருப்பலியும், இரவு 8.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழாவும், 26-ந் தேதி இரவு 8.15 மணிக்கு நற்கருணை பவனியும் நடக்கிறது.
27-ந் தேதி மாலை 5 மணிக்கு திருப்பயணிகள் திருப்பலி, இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, 10.30 மணிக்கு தேர்பவனி ஆகியவையும், விழாவின் நிறைவு நாளான 28-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை தொடர்ந்து திருவிழா திருப்பலி, காலை 7.30 மணி மலையாள திருப்பலி, பிற்பகல் 3.30 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், 9.30 மணிக்கு தேவா கலைக்குழு வழங்கும் மறைசாட்சி தேவசகாயம் வரலாற்று நாடகம் ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு முதல்திருவிருந்து திருப்பலியும், இரவு 8.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழாவும், 26-ந் தேதி இரவு 8.15 மணிக்கு நற்கருணை பவனியும் நடக்கிறது.
27-ந் தேதி மாலை 5 மணிக்கு திருப்பயணிகள் திருப்பலி, இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, 10.30 மணிக்கு தேர்பவனி ஆகியவையும், விழாவின் நிறைவு நாளான 28-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை தொடர்ந்து திருவிழா திருப்பலி, காலை 7.30 மணி மலையாள திருப்பலி, பிற்பகல் 3.30 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், 9.30 மணிக்கு தேவா கலைக்குழு வழங்கும் மறைசாட்சி தேவசகாயம் வரலாற்று நாடகம் ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X