search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித செபஸ்தியார்
    X
    புனித செபஸ்தியார்

    புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது

    குளச்சல் நெசவாளர் வீதியில் புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பங்கு குடும்ப திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும்.
    குளச்சல் நெசவாளர் வீதியில் புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பங்கு குடும்ப திருவிழா இன்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 24-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும். முதல் நாள் விழாவில் மாலை 6.30 மணிக்கு மெழுகுவர்த்தி பவனி, செபமாலை நடக்கிறது. இதனைதொடர்ந்து குளச்சல் பங்குப்பணியாளர் செல்வன் தலைமையில் கொடியேற்றம் நடைபெறும். அருட்பணியாளர் எடிசன் மறையுரையாற்றுகிறார்.

    தொடர்ந்து வரும் விழா நாட்களில் மாலை செபமாலை, திருப்பலி, திருவிருந்து, சிறப்பு ஆராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் இறுதி நாளான 24-ந் தேதியன்று மாலை 5.45 மணிக்கு நாஞ்சில் பால்பண்ணை இயக்குனரும், அருட்பணியாளருமான ஜெரால்டு ஜஸ்டின் தலைமையில் செபமாலை, நிறைவு திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு உறவு விருந்து நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×