search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோட்டார் சவேரியார்
    X
    கோட்டார் சவேரியார்

    கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 3-ம் நாள் திருவிழா

    நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 3-ம் நாள் திருவிழாவில் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
    நாகர்கோவில் கோட்டார் சவேரியார் பேராலயத்தின் 10 நாள் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் தினமும் விழா நாட்களில் காலையில் திருப்பலி, மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி ஆலயத்தில் நடைபெற்று வருகிறது.

    3-ம் நாள் திருவிழாவான நேற்று அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி நடந்தது. இதனைதொடர்ந்து மாலை 6.30 மணிக்கு முட்டம் வட்டார முதன்மை அருட்பணியாளர் ஜாண்ரூபஸ் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
    Next Story
    ×