search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கிறிஸ்து அரசர்
    X
    கிறிஸ்து அரசர்

    கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    நாகர்கோவில் கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் அருகே கிறிஸ்துநகர் கிறிஸ்து அரசர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, பிரார்த்தனை, 6.15 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, பிரார்த்தனை, திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    3-ம்நாள் விழாவான 15-ந்தேதி காலை 7.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இதில் அருட்பணியாளர் ஜகத் கஸ்பார் ராஜ் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு ஆக்ரா மறைமாவட்ட அருட்பணியாளர் அஜித் பிராங்கோ தலைமையில் திருப்பலி, இரவு 8.30 மணிக்கு கலைக்குழு மற்றும் இளைஞர் இயக்கம் நடத்தும் ஆன்லைன் கலைநிகழ்ச்சி நடக்கிறது.

    9-ம்நாள் விழாவான 21-ந்தேதி மாலை 5.45 மணிக்கு தேவசகாயம் மவுண்ட் வட்டார முதன்மை அருட்பணியாளர் பெர்பெச்சுவல் ஆன்டணி தலைமை தாங்கி ஜெபமாலை, பிரார்த்தனை, சிறப்பு மாலை ஆராதனையை நிறைவேற்றுகிறார். தொடர்ந்து இரவு கிறிஸ்து அரசர் தேர்பவனி நடைபெறுகிறது.

    10-ம்நாள் விழாவான 22-ந்தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா நடைபெறுகிறது. இதில் மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் கில்லாரியுஸ் தலைமை தாங்கி பெருவிழா திருப்பலியை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார். மாலை 5.30 மணிக்கு நன்றி திருப்பலி, கொடியிறக்கம், இரவு 8.30 மணிக்கு ஆன்லைன் கலைநிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு அருட்பணியாளர் வின்சென்ட் பி. வில்சன், இணை பங்கு அருட்பணியாளர் மைக்கேல் நியூமென், பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் ஜாய்சிங் மரியஜாண், செயலாளர் மரியஜாண் சேவியர், பொருளாளர் இளாடிஸ் பியூலா, துணை செயலாளர் பேபி ஆகியோர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×