என் மலர்
ஆன்மிகம்

புனித மிக்கேல் அதிதூதர்
புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா
அழகப்பபுரம் அருகே இந்திரா நகரில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இந்த ஆண்டுக்கான 10 நாட்கள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அழகப்பபுரம் அருகே இந்திரா நகரில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடந்தது. 9-ம் நாள் திருவிழாவில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருவிழா மாலை ஆராதனை நடந்தது. 10-ம் திருவிழாவில் நேற்று காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி ஆகியவை நடந்தது.
திருவிழா நாட்களில் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் உள்ளூர் பக்தர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராயர், உதவி பங்குத்தந்தை ரூபன் மற்றும் இந்திராநகர் மக்கள் செய்து இருந்தனர்.
விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடந்தது. 9-ம் நாள் திருவிழாவில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருவிழா மாலை ஆராதனை நடந்தது. 10-ம் திருவிழாவில் நேற்று காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி ஆகியவை நடந்தது.
திருவிழா நாட்களில் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் உள்ளூர் பக்தர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராயர், உதவி பங்குத்தந்தை ரூபன் மற்றும் இந்திராநகர் மக்கள் செய்து இருந்தனர்.
Next Story






