என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி
    X
    வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி

    வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி

    வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி ஆலய வளாகத்திற்குள் நடந்தது. முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
    தென்னகத்து வேளாங் கண்ணி என்று போற்றப்படும் புகழ் வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த 29-ந்தேதி மதுரை உயர் மறை மாவட்ட முதன்மை குரு ஜெயராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினந்தோறும் மாலை 5 மணிக்கு திருப்பலிகள் நடந்தன.

    நேற்று முக்கிய விழாவான ஆரோக்கிய அன்னை பிறப்பு விழா, இறைவார்த்தை சபையின் 145-வது எஸ்.வி.டி. பிறப்பு விழா, அற்புத ஜீவ ஊற்று இயேசுவின் அருமருந்து 20-வது ஆண்டு பிறப்பு விழா ஆகியவை நடந்தது. பின்னர் மாலை 5.30 மணிக்கு முப்பெரும் விழா கூட்டுத் திருப்பலியை இறைவார்த்தை சபை மாநில அதிபர் சாந்து ராஜா நடத்தி வைத்தார்.

    மேலும் ஆரோக்கிய அன்னை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட டிரை சைக்கிளில் ஆலயத்திற்குள் வலம் வந்தார். இன்று காலை 6.30 மணிக்கு ஆரோக்கிய அன்னையின் திருக்கொடி பங்குத்தந்தை ஆரோக்கிய தாஸ் தலைமையில் இறக்கப்பட்டு நன்றி திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை எஸ்.வி.டி.அதிபர் நிர்வாகி ஏ.ஜோசப் அடிகளார், பங்குதந்தை ஓய்.ஆரோக்கியதாஸ், உதவி பங்குத்தந்தை குழந்தை யேசுதாஸ் அடிகளார் மற்றும் இருபால் துறவியர், அன்பியங்கள் பங்கு மக்கள் ஆகியோர் செய்திருந்தனர். கொரோனா ஊரடங்கால் அரசு விதித்துள்ள விதிமுறைகளின்படி முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.
    Next Story
    ×