என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
தவக்காலத்தை முன்னிட்டு சிலுவை பாதை ஊர்வலம்
Byமாலை மலர்14 March 2020 4:14 AM GMT (Updated: 14 March 2020 4:14 AM GMT)
தவக்காலத்தை முன்னிட்டு வேளாங்கண்ணியில் சிலுவை பாதை ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் சிலுவையை ஏந்தி ஜெபித்து கொண்டு சென்றனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எண்ணற்ற பேர் வருகின்றனர்.
இந்த ஆலயமானது கீழை நாடுகளின் ‘‘லூர்து நகர்’’ என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு சிலுவை பாதை ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
இந்த ஊர்வலமானது பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை சென்றது. இதில் பக்தர்கள் சிலுவையை ஏந்தி ஜெபித்து கொண்டு சென்றனர்.
ஊர்வலத்தில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குத்தந்தை சூசை மாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்குத்தந்தை ஆண்டோஜேசுராஜ், உதவி பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் திரளான பேர் கலந்து கொண்டனர். சிலுவை பாதையை தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது.
இந்த ஆலயமானது கீழை நாடுகளின் ‘‘லூர்து நகர்’’ என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் தவக்காலத்தை முன்னிட்டு சிலுவை பாதை ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
இந்த ஊர்வலமானது பேராலயத்தின் மேல் கோவிலில் இருந்து பழைய மாதா கோவில் வரை சென்றது. இதில் பக்தர்கள் சிலுவையை ஏந்தி ஜெபித்து கொண்டு சென்றனர்.
ஊர்வலத்தில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குத்தந்தை சூசை மாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்குத்தந்தை ஆண்டோஜேசுராஜ், உதவி பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் திரளான பேர் கலந்து கொண்டனர். சிலுவை பாதையை தொடர்ந்து திருப்பலி நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X