search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய 8-ம் திருவிழா
    X
    தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய 8-ம் திருவிழா

    தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய 8-ம் திருவிழா

    தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய 8-ம் திருவிழாவில் நடைபெற்றது. கோட்டார் மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
    தேவசகாயம் மவுண்ட் தூய வியாகுல அன்னை ஆலய திருவிழா கடந்த 28-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-ம் திருவிழாவான நேற்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் புகழ் மாலை நடந்தது. தொடர்ந்து கோட்டார் மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

    கோட்டார் இளைஞர் பணிக்குழு செயலாளர் ஜெனிபர் எடிசன் அருளுரை வழங்கினார். பின்னர் நற்கருணை பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். இரவில் கத்தோலிக்க சங்கம் சார்பில் நடந்த பொதுக் கூட்டத்துக்கு வட்டார பங்கு பேரவை துணை தலைவர் ஜேக்கப் மனோகரன் தலைமை தாங்கினார். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதில் பங்கு தந்தை ஸ்டீபன், இணை பங்கு தந்தை மரிய ஜோசப் சிபு, பங்கு பேரவை துணை தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாய மைக்கிள்ராஜ், பொருளாளர் சேவியர் ராஜ், துணை செயலாளர் சகாய ரூபிலெட் மற்றும் கத்தோலிக்க சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×