search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித செபஸ்தியார்
    X
    புனித செபஸ்தியார்

    முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா நாளை தொடங்குகிறது

    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணியதிருத்தலங்களில் முத்துலாபுரம் புனித செபஸ்தியார் திருத்தல திருவிழா கொடியேற்றம் வருகிற 29-ந்தேதி (நாளை) மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது.
    கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புண்ணியதிருத்தலங்களில் முத்துலாபுரம் புனித செபஸ்தியார் திருத்தலமும் ஒன்றாகும். இது சைவத்திருத்தலம் என அழைக்கப்படும். இத்திருத்தல திருவிழா கொடியேற்றம் வருகிற 29-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. புனித செபஸ்தியார் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை சாத்தான்குளம் வட்டார முதன்மைக் குரு ஜோசப் ரவி பாலன் ஜெபம் செய்து கொடியேற்றுகிறார்.

    அதனைத்தொடர்ந்து சிறப்பு மாலை ஆராதனை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடக்கிறது. தொடர்ந்து திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.

    பிப்ரவரி 4-ந்தேதி 7-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று இரவு 9 மணிக்கு புனித செபஸ்தியாரின் தேர்ப்பவனி நடைபெறுகிறது. 5-ந் தேதி 8-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலையில் தெற்கு கள்ளிகுளம் ஜெரால்டு ரவி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இத்திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. 6.30 மணிக்கு மாலை ஆராதனை நடைபெறுகிறது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோணி மறையுரை வழங்குகிறார்.

    6-ந்தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு தெற்கு கள்ளிகுளம் அதிசயபனிமாதா பள்ளி முதல்வர் வின்சென்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இரவு 6.30 மணிக்கு பாளை மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு ஜூடு பால்ராஜ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து. இரவு 11.30 மணிக்கு கலர் வானவேடிக்கையும், கேரள புகழ் ஜெண்டா மேளமும் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு புனித செபஸ்தியாரின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெறுகிறது. இப்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள்.

    7-ந்தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. காலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் கூட்டுத் திருப்பலி ஆற்றுகிறார். பின்னர் மாலை ஆராதனையும் அதனைத்தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ராஜன், கணக்கர் செல்லத்துரை பங்கு தந்தை டென்ஸில் ராஜா முத்துலாபுரம் இறைமக்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×