என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி
Byமாலை மலர்25 Jan 2020 3:25 AM GMT (Updated: 25 Jan 2020 3:25 AM GMT)
கோணான்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் கிறிஸ்தவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே கோணான்குப்பம் கிராமத்தில் புகழ்பெற்ற புனித பெரிய நாயகி அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஆண்டு பெருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா மற்றும் ஆலயம் கட்டி 300-வது ஆண்டு தொடக்க விழா கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் வேலூர் மறை மாவட்ட ஆயர் சவுந்தரராஜூ பெரியநாயகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பெருவிழா கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தினசரி சிறப்பு திருப்பலியும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆலய பங்குதந்தைகள் தலைமையில் சிலுவை பாதையும் நடந்து வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது. இதில் பாரம்பரிய முறைப்படி பாளையக்காரரான பாலதண்டாயுதம், ஜமீன் அலங்கார உடையில் முகாசபரூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியநாயகி அன்னை ஆலயத்திற்கு வந்தார்.
அங்கு கோவில் முன்பு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு 3 தேர்கள் தயார் நிலையில் இருந்தன. முதல் தேரில் புனித அந்தோணியார் சொரூபமும், 2-வது தேரில் புனித சூசையப்பர் சொரூபமும், 3-வது தேரில் பெரிய நாயகி அன்னை சொரூபமும் வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக புதுச்சேரி, கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் பெருவிழா திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்டத்தை பாலதண்டாயுதம் தொடங்கி வைக்க, 3 தேர்களும் ஆலயத்தை சுற்றி வலம் வந்தன. இதில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மங்கலம்பேட்டை, விருத்தாசலம் பகுதியில் இருந்து கோணான்குப்பத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. முன்னதாக மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதோடு வெளியூர்களில் இருந்து வந்திருந்தவர்கள் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் தேவாலயம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் தேவ சகாயராஜ், உதவி பங்கு தந்தை அலெக்ஸ் ஒளில் குமார், முகாசப்பரூர் ஜமீன் குடும்பத்தினர், வட்டார குருக்கள், அருட்சகோதரிகள், காரியஸ்தர்கள், மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
இதில் வேலூர் மறை மாவட்ட ஆயர் சவுந்தரராஜூ பெரியநாயகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பெருவிழா கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து தினசரி சிறப்பு திருப்பலியும், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆலய பங்குதந்தைகள் தலைமையில் சிலுவை பாதையும் நடந்து வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி காலை 7.30 மணிக்கு பெருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. இரவு 9 மணிக்கு ஆடம்பர தேர் பவனி நடந்தது. இதில் பாரம்பரிய முறைப்படி பாளையக்காரரான பாலதண்டாயுதம், ஜமீன் அலங்கார உடையில் முகாசபரூரில் உள்ள தனது வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பெரியநாயகி அன்னை ஆலயத்திற்கு வந்தார்.
அங்கு கோவில் முன்பு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு 3 தேர்கள் தயார் நிலையில் இருந்தன. முதல் தேரில் புனித அந்தோணியார் சொரூபமும், 2-வது தேரில் புனித சூசையப்பர் சொரூபமும், 3-வது தேரில் பெரிய நாயகி அன்னை சொரூபமும் வைக்கப்பட்டிருந்தன. முன்னதாக புதுச்சேரி, கடலூர் உயர் மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் பெருவிழா திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்டத்தை பாலதண்டாயுதம் தொடங்கி வைக்க, 3 தேர்களும் ஆலயத்தை சுற்றி வலம் வந்தன. இதில் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மங்கலம்பேட்டை, விருத்தாசலம் பகுதியில் இருந்து கோணான்குப்பத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. முன்னதாக மங்கலம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதோடு வெளியூர்களில் இருந்து வந்திருந்தவர்கள் தங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் தேவாலயம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் தேவ சகாயராஜ், உதவி பங்கு தந்தை அலெக்ஸ் ஒளில் குமார், முகாசப்பரூர் ஜமீன் குடும்பத்தினர், வட்டார குருக்கள், அருட்சகோதரிகள், காரியஸ்தர்கள், மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X