search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    மிக்கேல்
    X
    மிக்கேல்

    நாகர்கோவில் வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா

    நாகர்கோவில்,வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    நாகர்கோவில், வேதநகர் புனித மிக்கேல் முதன்மை வானதூதர் ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    நாளை மாலை 6.30 மணிக்கு செபமாலை, திருக்கொடியேற்றம் நடக்கிறது. இதற்கு அருட்பணி ஜோசப் தலைமை தாங்குகிறார். இரவு 7 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணி தேவதாஸ் தலைமையில் எவாஞ்சலின் எம்.பெஸ்கி மறையுரையாற்றுகிறார்.

    மேலும் விழா நாட்களில் செபமாலை, திருப்பலி, பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள், நற்கருணை ஆராதனை, நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெறுகிறது. விழாவில் 21-ந் தேதி அருட்பணி அருள் தலைமையில் சார்லஸ் மறையுரையாற்றுகிறார்.

    22-ந்தேதி காலை 7 மணிக்கு அருட்பணி மைக்கல் ஏஞ்சலுஸ் தலைமையில் ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். 23-ந் தேதி அருட்பணி சேவியர் ராஜா தலைமையில் அந்தோணியப்பன் மறையுரையாற்றுகிறார்.

    28-ந் தேதி அருட்பணி ஜோசப் ராஜ் தலைமையில் பெஞ்சமின் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஆராதனையில், அருட்பணி கிளாரியுஸ் தலைமையில் ஜாண்சன் மறையுரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறுகிறது.

    29-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு திருப்பலி, அருட்பணி ஜாண்சன் தலைமையில் கபிரியேல் மறையுரையாற்றுகிறார். மதியம் 2 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு சிறுசேமிப்பு ஆண்டுவிழா மற்றும் பரிசு வழங்குதல் நடைபெறுகிறது.
    Next Story
    ×