search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருக்குடும்பம்
    X
    திருக்குடும்பம்

    மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    நாகர்கோவில் அருகே மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    நாகர்கோவில் அருகே மேலராமன்புதூர் பரிசுத்த திருக்குடும்ப ஆலய திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாளில் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. அருட்பணியாளர் மைக்கிள் ஏஞ்சல் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் வலேரியன் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். 22-ந் தேதி காலை 7.30 மணி முதல் மாலை 4 மணி வரை நற்கருணை ஆராதனை நடக்கிறது.

    வருகிற 28-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் மாணவ-மாணவிகளுக்கு முதல்திருவிருந்து வழங்கப்படும். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை நடக்கிறது. அருட்பணியாளர் சாலமோன் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் மைக்கிள் ராஜ் மறையுரையாற்றுகிறார். இரவு 8.30 மணிக்கு தேர் பவனி நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 29-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் ஹில்லாரியுஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் அல்போன்ஸ் மறையுரையாற்றுகிறார். மாலை 3.30 மணிக்கு தேர் பவனி, 6.30 மணிக்கு திருப்பலி, இரவு 8.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை தலைமையில் பங்கு அருட்பணி பேரவையினர், பங்குமக்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×