என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித பனிமய அன்னை ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்29 Aug 2019 4:56 AM GMT (Updated: 29 Aug 2019 4:56 AM GMT)
கீழ ஆசாரிபள்ளம் புனித பனிமய அன்னை ஆலய திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நாகர்கோவில் அருகே கீழ ஆசாரிபள்ளத்தில் உள்ள புனித பனிமய அன்னை ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து விழா 10 நாட்கள் நடக்கிறது.
நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவில் வருகிற 6-ந் தேதி இரவு 9 மணிக்கு புனித வளனார் தேர் பவனி, 7-ந் தேதி காலை 6.30 மணிக்கு முன்னாள் பங்குத்தந்தை ஆன்றனி கிளாரட் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி, காலை 10 மணிக்கு வளனார் தேர் பவனி, மாலை 6.15 மணிக்கு சூசை தலைமையில் ஆடம்பர மாலை ஆராதனை, இரவு 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.
8-ந்தேதி காலை 5 மணிக்கு திருப்பலி, 7 மணிக்கு மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி, 10 மணிக்கு அன்னையின் தேர் பவனி ஆகியவை நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அந்தோணிபிச்சை மற்றும் பங்கு நிர்வாகிகள், பங்கு மக்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
நாளை காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
விழாவில் வருகிற 6-ந் தேதி இரவு 9 மணிக்கு புனித வளனார் தேர் பவனி, 7-ந் தேதி காலை 6.30 மணிக்கு முன்னாள் பங்குத்தந்தை ஆன்றனி கிளாரட் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி, காலை 10 மணிக்கு வளனார் தேர் பவனி, மாலை 6.15 மணிக்கு சூசை தலைமையில் ஆடம்பர மாலை ஆராதனை, இரவு 10 மணிக்கு அன்னையின் அலங்கார தேர் பவனி நடக்கிறது.
8-ந்தேதி காலை 5 மணிக்கு திருப்பலி, 7 மணிக்கு மைக்கேல் ஏஞ்சலூஸ் தலைமையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி, 10 மணிக்கு அன்னையின் தேர் பவனி ஆகியவை நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை அந்தோணிபிச்சை மற்றும் பங்கு நிர்வாகிகள், பங்கு மக்கள், அருட்சகோதரிகள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X