என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை மாதா ஆலயம் திருத்தலமாக உயர்வு
Byமாலை மலர்17 Aug 2019 4:39 AM GMT (Updated: 17 Aug 2019 4:39 AM GMT)
கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை மாதா ஆலயம் தமிழ்நாட்டில் 7-வது திருத்தலமாக உயர்வு பெற்றது.
உலகம் முழுவதும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வழிபாட்டு தலங்கள் ஆலயம், பேராலயம், திருத்தலம் (பசிலிக்கா) என்று பிரிக்கப்படுகிறது. இவற்றில் ஆலயம் என்பது பொதுவாக இருக்கக்கூடியது.
இதில் ஆலய குருக்கள் இறைப்பணி செய்கின்றனர். பேராலயம் என்பது மாவட்ட தலைநகரங்களில் கத்தோலிக்க பிஷப் (ஆயர்) இறைப்பணி செய்யும் இடமாக விளங்க கூடியது. ஆனால் திருத்தலம் என்பது ஆலயங்களில் சிறப்பு அந்தஸ்து பெற்றதாக விளங்கும்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித தோமையார் பேராலயம் (சென்னை), ஆரோக்கிய மாதா ஆலயம் (வேளாங்கண்ணி), பனிமய மாதா ஆலயம் (தூத்துக்குடி), புனித லூர்து மாதா (பூண்டி), புனித ரட்சகர் (திருச்சி), தூய இருதய ஆண்டவர் (பாண்டிச்சேரி) ஆகிய 6 திருத்தலங்களாக உள்ளன. தற்போது 7-வது திருத்தல சிறப்பு பெற்றதாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை மாதா ஆலயம் போப்பாண்டவரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்ததாகும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழாவின்போது சாதி, மத பேதமின்றி லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். இந்தநிலையில் பல்வேறு பெருமைக்குரிய இந்த ஆலயம் தற்போது தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கிறிஸ்தவர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
இதில் ஆலய குருக்கள் இறைப்பணி செய்கின்றனர். பேராலயம் என்பது மாவட்ட தலைநகரங்களில் கத்தோலிக்க பிஷப் (ஆயர்) இறைப்பணி செய்யும் இடமாக விளங்க கூடியது. ஆனால் திருத்தலம் என்பது ஆலயங்களில் சிறப்பு அந்தஸ்து பெற்றதாக விளங்கும்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் புனித தோமையார் பேராலயம் (சென்னை), ஆரோக்கிய மாதா ஆலயம் (வேளாங்கண்ணி), பனிமய மாதா ஆலயம் (தூத்துக்குடி), புனித லூர்து மாதா (பூண்டி), புனித ரட்சகர் (திருச்சி), தூய இருதய ஆண்டவர் (பாண்டிச்சேரி) ஆகிய 6 திருத்தலங்களாக உள்ளன. தற்போது 7-வது திருத்தல சிறப்பு பெற்றதாக கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை மாதா ஆலயம் போப்பாண்டவரால் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்ததாகும். மிகவும் சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தின் தேர்த்திருவிழாவின்போது சாதி, மத பேதமின்றி லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். இந்தநிலையில் பல்வேறு பெருமைக்குரிய இந்த ஆலயம் தற்போது தமிழகத்தின் 7-வது பசிலிக்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட கிறிஸ்தவர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X