என் மலர்
ஆன்மிகம்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய வளாகத்தில் நேற்று இரவு அன்னையின் திருவுருவ பவனி நடந்த போது எடுத்த படம்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நேற்று இரவு நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய 437-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் செபமாலை, மறையுரை ஆசீர், நற்கருணை ஆசீர், கூட்டு திருப்பலி ஆகியவை நடந்தன. விழாவையொட்டி கடந்த 28-ந் தேதி புதுநன்மை, நற்கருணை பவனி விழா நடந்தது.
10-வது திருநாளான நேற்று காலை 8-30 மணிக்கு நோயுற்றோருக்கான சிறப்பு திருப்பலியும், மாலை 5-30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்கான திருப்பலியும், இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னையின் திருவுருவம் வைக்கப்பட்டு ஆலயத்தை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இன்று (திங்கட்கிழமை) காலை 5-30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட பிஷப் நசரேன் தலைமையில் இரண்டாம் திருப்பலியும், 7-30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.
விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சாதாரண உடை அணிந்த போலீசார் மக்களோடு, மக்களாக நின்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
10-வது திருநாளான நேற்று காலை 8-30 மணிக்கு நோயுற்றோருக்கான சிறப்பு திருப்பலியும், மாலை 5-30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட மக்களுக்கான திருப்பலியும், இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடந்தது. தொடர்ந்து 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னையின் திருவுருவம் வைக்கப்பட்டு ஆலயத்தை சுற்றி பவனி வரும் நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
இன்று (திங்கட்கிழமை) காலை 5-30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட பிஷப் நசரேன் தலைமையில் இரண்டாம் திருப்பலியும், 7-30 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலியும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி நடக்கிறது.
விழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சாதாரண உடை அணிந்த போலீசார் மக்களோடு, மக்களாக நின்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






