என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்1 Aug 2019 3:31 AM GMT (Updated: 1 Aug 2019 3:31 AM GMT)
நாகர்கோவில் மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 11-ந் தேதி வரை நடக்கிறது.
நாகர்கோவில் மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 11-ந் தேதி வரை நடக்கிறது. நாளை மாலை 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடைபெறுகிறது. ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். முன்னதாக செபமாலை, பங்குத்தந்தைக்கு ஊர் மக்கள் வரவேற்பு, ஆயருக்கு வரவேற்பு நடைபெறுகிறது. 3-ந் தேதி மாலை 6 மணிக்கு ஆராதனை அருட்பணியாளர் பிறிம்மஸ் சிங் தலைமையில் நடக்கிறது. ஜெயச்சந்திர ரூபன் மறையுரையாற்றுகிறார். 4-ந் தேதி காலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு அருட்பணியாளர் இம்மானுவேல் தலைமை தாங்க, ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் பென்சிகர் தலைமையில் நற்கருணை ஆசீர் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா நடைபெறுகிறது.
5-ந் தேதி மாலை 6 மணிக்கு அன்னையின் பெருவிழா திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் மரியதாஸ் தலைமை தாங்க, பிரபுதாஸ் மறையுரையாற்றுகிறார். இவர்களுடன் பிரான்சீஸ் எம்.போர்ஜியா இணைந்து ஜெபிக்கிறார்.
6-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு அருட்பணியாளர் ரவி காட்சன் கென்னடி தலைமை தாங்க, ஆரோக்கிய ரமேஷ் மறையுரையாற்றுகிறார். 7-ந் தேதி மாலை 6 மணி திருப்பலிக்கு அருட்பணியாளர் சாலமோன் தலைமை தாங்குகிறார். பஸ்காலிஸ் மறையுரையாற்றுகிறார்.
8-ந் தேதி மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் ஆன்ட்ரூஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மரிய கிளாஸ்டன் மறையுரையாற்றுகிறார். 9-ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கும் திருப்பலிக்கு அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமை தாங்க, பிரான்சீஸ் சேவியர் நெல்சன் மறையுரையாற்றுகிறார்.
10-ந் தேதி காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் லியோன் கென்சன் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஹிலேரியூஸ் மறையுரையாற்றுகிறார். இவருடன் அஜின் ஜோஸ் இணைந்து ஜெபிக்கிறார்.
10-ந் தேதி மாலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் மரிய வில்லியம் தலைமையில் ஆராதனை நடக்கிறது. ஆரோக்கிய ஆன்றோ மறையுரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது.
11-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் ஆடம்பர திருப்பலிக்கு அருட்பணியாளர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்க, வில்சன் மறையுரையாற்றுகிறார். இவர்களுடன் சேவியர் ராஜ், பிரைட் இணைந்து ஜெபிக்கிறார்கள். பகல் 2 மணிக்கு அன்னையின் தேர் பவனி, நற்கருணை ஆசீர்வாதம், கொடியிறக்கம், ஆண்டுவிழா பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
5-ந் தேதி மாலை 6 மணிக்கு அன்னையின் பெருவிழா திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் மரியதாஸ் தலைமை தாங்க, பிரபுதாஸ் மறையுரையாற்றுகிறார். இவர்களுடன் பிரான்சீஸ் எம்.போர்ஜியா இணைந்து ஜெபிக்கிறார்.
6-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு அருட்பணியாளர் ரவி காட்சன் கென்னடி தலைமை தாங்க, ஆரோக்கிய ரமேஷ் மறையுரையாற்றுகிறார். 7-ந் தேதி மாலை 6 மணி திருப்பலிக்கு அருட்பணியாளர் சாலமோன் தலைமை தாங்குகிறார். பஸ்காலிஸ் மறையுரையாற்றுகிறார்.
8-ந் தேதி மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் ஆன்ட்ரூஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மரிய கிளாஸ்டன் மறையுரையாற்றுகிறார். 9-ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கும் திருப்பலிக்கு அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமை தாங்க, பிரான்சீஸ் சேவியர் நெல்சன் மறையுரையாற்றுகிறார்.
10-ந் தேதி காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் லியோன் கென்சன் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஹிலேரியூஸ் மறையுரையாற்றுகிறார். இவருடன் அஜின் ஜோஸ் இணைந்து ஜெபிக்கிறார்.
10-ந் தேதி மாலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் மரிய வில்லியம் தலைமையில் ஆராதனை நடக்கிறது. ஆரோக்கிய ஆன்றோ மறையுரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது.
11-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் ஆடம்பர திருப்பலிக்கு அருட்பணியாளர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்க, வில்சன் மறையுரையாற்றுகிறார். இவர்களுடன் சேவியர் ராஜ், பிரைட் இணைந்து ஜெபிக்கிறார்கள். பகல் 2 மணிக்கு அன்னையின் தேர் பவனி, நற்கருணை ஆசீர்வாதம், கொடியிறக்கம், ஆண்டுவிழா பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X