search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித தஸ்நேவிஸ் மாதா
    X
    புனித தஸ்நேவிஸ் மாதா

    புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது

    நாகர்கோவில் மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 11-ந் தேதி வரை நடக்கிறது.
    நாகர்கோவில் மறவன்குடியிருப்பு புனித தஸ்நேவிஸ் மாதா ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 11-ந் தேதி வரை நடக்கிறது. நாளை மாலை 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடைபெறுகிறது. ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். முன்னதாக செபமாலை, பங்குத்தந்தைக்கு ஊர் மக்கள் வரவேற்பு, ஆயருக்கு வரவேற்பு நடைபெறுகிறது. 3-ந் தேதி மாலை 6 மணிக்கு ஆராதனை அருட்பணியாளர் பிறிம்மஸ் சிங் தலைமையில் நடக்கிறது. ஜெயச்சந்திர ரூபன் மறையுரையாற்றுகிறார். 4-ந் தேதி காலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு அருட்பணியாளர் இம்மானுவேல் தலைமை தாங்க, ஸ்டான்லி சகாய சீலன் மறையுரையாற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் பென்சிகர் தலைமையில் நற்கருணை ஆசீர் நடக்கிறது. அதைத்தொடர்ந்து மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா நடைபெறுகிறது.

    5-ந் தேதி மாலை 6 மணிக்கு அன்னையின் பெருவிழா திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் மரியதாஸ் தலைமை தாங்க, பிரபுதாஸ் மறையுரையாற்றுகிறார். இவர்களுடன் பிரான்சீஸ் எம்.போர்ஜியா இணைந்து ஜெபிக்கிறார்.

    6-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு அருட்பணியாளர் ரவி காட்சன் கென்னடி தலைமை தாங்க, ஆரோக்கிய ரமேஷ் மறையுரையாற்றுகிறார். 7-ந் தேதி மாலை 6 மணி திருப்பலிக்கு அருட்பணியாளர் சாலமோன் தலைமை தாங்குகிறார். பஸ்காலிஸ் மறையுரையாற்றுகிறார்.

    8-ந் தேதி மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் ஆன்ட்ரூஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மரிய கிளாஸ்டன் மறையுரையாற்றுகிறார். 9-ந் தேதி மாலை 6 மணிக்கு நடக்கும் திருப்பலிக்கு அருட்பணியாளர் பேட்ரிக் சேவியர் தலைமை தாங்க, பிரான்சீஸ் சேவியர் நெல்சன் மறையுரையாற்றுகிறார்.

    10-ந் தேதி காலை 6 மணிக்கு முதல் திருவிருந்து நடக்கிறது. நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் லியோன் கென்சன் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஹிலேரியூஸ் மறையுரையாற்றுகிறார். இவருடன் அஜின் ஜோஸ் இணைந்து ஜெபிக்கிறார்.

    10-ந் தேதி மாலை 6.30 மணிக்கு அருட்பணியாளர் மரிய வில்லியம் தலைமையில் ஆராதனை நடக்கிறது. ஆரோக்கிய ஆன்றோ மறையுரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு அன்னையின் தேர் பவனி நடைபெறுகிறது.

    11-ந் தேதி காலை 7 மணிக்கு நடைபெறும் ஆடம்பர திருப்பலிக்கு அருட்பணியாளர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்க, வில்சன் மறையுரையாற்றுகிறார். இவர்களுடன் சேவியர் ராஜ், பிரைட் இணைந்து ஜெபிக்கிறார்கள். பகல் 2 மணிக்கு அன்னையின் தேர் பவனி, நற்கருணை ஆசீர்வாதம், கொடியிறக்கம், ஆண்டுவிழா பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×