என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது
Byமாலை மலர்16 July 2019 3:24 AM GMT (Updated: 16 July 2019 3:24 AM GMT)
ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
ரஜகிருஷ்ணாபுரம் புனித அன்னம்மாள் ஆலய திருவிழா நாளை (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் நாளை அதிகாலை 5.15 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு வடவை மறைவட்ட முதன்மை குரு ஜாண் பிரிட்டோ தலைமையில் திருவிழா கொடியேற்றம், மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலை திருப்பலி, மாலை 6.30 மணிக்கு மறையுரை நற்கருணை ஆசீர், இரவு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
24-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையில் திருப்பலியும், முதல் திருவிருந்து வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 25-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.
அதைத்தொடர்ந்து பரலோக அன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது. 26-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி, மதியம் 2 மணிக்கு அன்னை தேர்பவனி, இரவு 9 மணிக்கு நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அமல்ராஜ், பங்குமேய்ப்பு பணிக்குழு துணை தலைவர் விட்மன், செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் ஜாஸ்மின், பொருளாளர் பாத்திமா மைக்கிள்ராஜன், அருட்சகோதரிகள், பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
விழா நாட்களில் தினமும் காலை திருப்பலி, மாலை 6.30 மணிக்கு மறையுரை நற்கருணை ஆசீர், இரவு கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகிறது.
24-ந் தேதி அதிகாலை 5.15 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையில் திருப்பலியும், முதல் திருவிருந்து வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 25-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நிறைவேற்றி மறையுரையாற்றுகிறார்.
அதைத்தொடர்ந்து பரலோக அன்னையின் அலங்கார தேர்பவனி நடக்கிறது. 26-ந் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலி, மதியம் 2 மணிக்கு அன்னை தேர்பவனி, இரவு 9 மணிக்கு நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை அமல்ராஜ், பங்குமேய்ப்பு பணிக்குழு துணை தலைவர் விட்மன், செயலாளர் ஞானசேகர், துணை செயலாளர் ஜாஸ்மின், பொருளாளர் பாத்திமா மைக்கிள்ராஜன், அருட்சகோதரிகள், பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X