search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகர்கோவில் இயேசுவின் திரு இருதய ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    நாகர்கோவில் இயேசுவின் திரு இருதய ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    நாகர்கோவில் வேப்பமூடு இயேசுவின் திரு இருதய ஆலய பங்கு குடும்ப திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.
    நாகர்கோவில் வேப்பமூடு இயேசுவின் திரு இருதய ஆலய பங்கு குடும்ப திருவிழா வருகிற இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் முதல்நாளான இன்று மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை நவநாள், தொடர்ந்து கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு திருவிழா கொடியை ஏற்றி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள், திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.

    இன்று காலை 11 மணிக்கு அன்னை நகர் பங்குதந்தை சகாய ஆனந்த் தலைமை தாங்கி நோயாளிகளுக்கான திருப்பலி, இரவு 8.30 மணிக்கு அன்பின் விருந்து ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 29-ந்தேதி காலை 6.15 மணிக்கு திருப்பலி, இரவு 8.30 மணிக்கு அன்பியம் மற்றும் பக்தசபை ஒருங்கிணையங்களின் ஆண்டுவிழா, 30-ந்தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆன்டணி தலைமை தாங்கி திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 5 மணிக்கு கோட்டார் வட்டார முதன்மைப் பணியாளர் மைக்கேல் ஏஞ்சலுஸ் தலைமையில் திருப்பலி, கொடியிறக்கம், 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா ஆகியவை நடைபெறுகிறது.

    Next Story
    ×