search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஓலையூரில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி
    X

    ஓலையூரில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி

    மணிகண்டம் அருகே ஓலையூரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது.
    மணிகண்டம் அருகே ஓலையூரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை ஆலய கொடிமரத்தில் ஆவூர் பங்குத்தந்தை டேவிட்ராஜ் கொடி ஏற்றி வைத்து திருப்பலி நடத்தினார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. இதை முன்னிட்டு அன்று காலை பங்குத்தந்தை டேவிட்ராஜ் மறைமாவட்ட இளையோர் பணிக்குழு தலைவர் ரமேஷ் ஆகியோர் திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடத்தினர். மாலையில் வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்கள் பவனி வந்தன. முதல் தேரில் சம்மனசு, 2-வது தேரில் சூசையப்பர், 3-வது தேரில் புனித ஆரோக்கிய அன்னை எழுந்தருளினர்.

    தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து இன்னிசை கச்சேரி, கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
    Next Story
    ×