என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
ஓலையூரில் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி
Byமாலை மலர்13 Jun 2019 3:33 AM GMT (Updated: 13 Jun 2019 3:33 AM GMT)
மணிகண்டம் அருகே ஓலையூரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது.
மணிகண்டம் அருகே ஓலையூரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை ஆலய கொடிமரத்தில் ஆவூர் பங்குத்தந்தை டேவிட்ராஜ் கொடி ஏற்றி வைத்து திருப்பலி நடத்தினார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. இதை முன்னிட்டு அன்று காலை பங்குத்தந்தை டேவிட்ராஜ் மறைமாவட்ட இளையோர் பணிக்குழு தலைவர் ரமேஷ் ஆகியோர் திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடத்தினர். மாலையில் வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்கள் பவனி வந்தன. முதல் தேரில் சம்மனசு, 2-வது தேரில் சூசையப்பர், 3-வது தேரில் புனித ஆரோக்கிய அன்னை எழுந்தருளினர்.
தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து இன்னிசை கச்சேரி, கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. இதை முன்னிட்டு அன்று காலை பங்குத்தந்தை டேவிட்ராஜ் மறைமாவட்ட இளையோர் பணிக்குழு தலைவர் ரமேஷ் ஆகியோர் திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடத்தினர். மாலையில் வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்கள் பவனி வந்தன. முதல் தேரில் சம்மனசு, 2-வது தேரில் சூசையப்பர், 3-வது தேரில் புனித ஆரோக்கிய அன்னை எழுந்தருளினர்.
தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து இன்னிசை கச்சேரி, கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X