என் மலர்
ஆன்மிகம்

இயேசுவின் திருஇருதய ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
நாகர்கோவில், இயேசுவின் திருஇருதய ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி 10-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில், இயேசுவின் திருஇருதய ஆலய திருவிழா இன்று (புதன்கிழமை) தொடங்கி 10-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இன்று மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. நிகழ்ச்சியில் கோட்டார் ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, நவநாள், திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறுகிறது. 8-ந் தேதி காலை 11 மணிக்கு அருட்பணியாளர் ஆன்டனி பென்சிகர் தலைமையில் நோயாளிகளுக்கான திருப்பலி நடக்கிறது.
9-ந் தேதி இரவு 8.30 மணிக்கு அன்பிய ஒருங்கிணையம், பக்த சபை ஒருங்கிணையங்களின் ஆண்டு விழா நடைபெறுகிறது.
விழாவின் இறுதி நாளான 10-ந் தேதி காலை 7.10 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. மாலை 5 மணிக்கு குருசடி பங்குத்தந்தை பிரான்சிஸ் போர்ஜியா தலைமையில் நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான்சன் தலைமையில் பங்கு மேய்ப்புப்பணி பேரவையினர், பங்குமக்கள் செய்துள்ளனர்.
தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, நவநாள், திருப்பலி, மறையுரை போன்றவை நடைபெறுகிறது. 8-ந் தேதி காலை 11 மணிக்கு அருட்பணியாளர் ஆன்டனி பென்சிகர் தலைமையில் நோயாளிகளுக்கான திருப்பலி நடக்கிறது.
9-ந் தேதி இரவு 8.30 மணிக்கு அன்பிய ஒருங்கிணையம், பக்த சபை ஒருங்கிணையங்களின் ஆண்டு விழா நடைபெறுகிறது.
விழாவின் இறுதி நாளான 10-ந் தேதி காலை 7.10 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடக்கிறது. மாலை 5 மணிக்கு குருசடி பங்குத்தந்தை பிரான்சிஸ் போர்ஜியா தலைமையில் நடைபெறும் திருப்பலியில் அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஜான்சன் தலைமையில் பங்கு மேய்ப்புப்பணி பேரவையினர், பங்குமக்கள் செய்துள்ளனர்.
Next Story






