என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
சிலுவைக்கு பின்னால் உயிர்ப்பு உண்டு
Byமாலை மலர்30 May 2018 3:31 AM GMT (Updated: 30 May 2018 3:31 AM GMT)
சிலுவை இல்லாமல் இயேசு மக்களை அன்பு செய்யவில்லை. சிலுவைக்கு பின்னால் உயிர்ப்பு உண்டு என்பதை உணர்வோம். துன்பங்களுக்கு பின்னால் பேரின்பம் உண்டு என்பதை ஏற்போம்.
குளிர்கால கூட்டம் ஒன்றில் பேசிவிட்டு, தொண்டர் ஒருவரின் வீட்டில் இரவு தங்கினார் தலைவர். அந்த வீடு ஒரு வசந்த பவனாக இருந்தது. தொண்டரோ வெளியில் தூங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
குளிர் ரத்தத்தை உறையச் செய்தது. கை, கால் விரல்கள் நடுங்கின. காலையில் தலைவர் தொண்டரை நலம் விசாரித்தபோது குளிர் என்றால் என்ன வென்றே தெரியாது போல பாவனை செய்தார் தொண்டர். தலைவர் மீது வைத்த அன்புக்காக அத்தொண்டர் இரவெல்லாம் துன்புற நேர்ந்தது. இதுதான் அன்பு வருத்தம் என்பது. அன்பு, துன்பங்களை கொண்டுவரும்.
அத்துன்பங்களிலே தான் மகிழ்ச்சி மலர்ந்து மணம் வீசும். ஏழை கைம்பெண் (லூக் 21:4) தனக்கு பற்றாக்குறை இருந்தும் தனக்கு உள்ளது எல்லாவற்றையும் இறைவனுக்கு காணிக்கையாக்கினாள். மறுநாள் கடினப்பட்டு உழைத்து உண்ண நேர்ந்திருக்கும். இங்கே தான் அன்பு துன்புறுத்துகிறது. பேறுகாலத்துயரை கடந்த தாய், தன் பச்சிளம் குழந்தையை பார்க்கிறபோது உலகில் ஒரு மகான் உதித்துவிட்டான் என்று பேருவகை கொள்கிறாள்.
நாம் துன்புற்றாலும் ஏழைகளுக்கும் எளியவருக்கும் உதவுவது நம் கடமை. இயேசுபிரான் சிலுவையை சுமந்து தான் மனுக்குலத்தை அன்பு செய்தார். சிலுவை இல்லாமல் இயேசு மக்களை அன்பு செய்யவில்லை. சிலுவைக்கு பின்னால் உயிர்ப்பு உண்டு என்பதை உணர்வோம். துன்பங்களுக்கு பின்னால் பேரின்பம் உண்டு என்பதை ஏற்போம்.
குழந்தை, காணியிருப்பு.
குளிர் ரத்தத்தை உறையச் செய்தது. கை, கால் விரல்கள் நடுங்கின. காலையில் தலைவர் தொண்டரை நலம் விசாரித்தபோது குளிர் என்றால் என்ன வென்றே தெரியாது போல பாவனை செய்தார் தொண்டர். தலைவர் மீது வைத்த அன்புக்காக அத்தொண்டர் இரவெல்லாம் துன்புற நேர்ந்தது. இதுதான் அன்பு வருத்தம் என்பது. அன்பு, துன்பங்களை கொண்டுவரும்.
அத்துன்பங்களிலே தான் மகிழ்ச்சி மலர்ந்து மணம் வீசும். ஏழை கைம்பெண் (லூக் 21:4) தனக்கு பற்றாக்குறை இருந்தும் தனக்கு உள்ளது எல்லாவற்றையும் இறைவனுக்கு காணிக்கையாக்கினாள். மறுநாள் கடினப்பட்டு உழைத்து உண்ண நேர்ந்திருக்கும். இங்கே தான் அன்பு துன்புறுத்துகிறது. பேறுகாலத்துயரை கடந்த தாய், தன் பச்சிளம் குழந்தையை பார்க்கிறபோது உலகில் ஒரு மகான் உதித்துவிட்டான் என்று பேருவகை கொள்கிறாள்.
நாம் துன்புற்றாலும் ஏழைகளுக்கும் எளியவருக்கும் உதவுவது நம் கடமை. இயேசுபிரான் சிலுவையை சுமந்து தான் மனுக்குலத்தை அன்பு செய்தார். சிலுவை இல்லாமல் இயேசு மக்களை அன்பு செய்யவில்லை. சிலுவைக்கு பின்னால் உயிர்ப்பு உண்டு என்பதை உணர்வோம். துன்பங்களுக்கு பின்னால் பேரின்பம் உண்டு என்பதை ஏற்போம்.
குழந்தை, காணியிருப்பு.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X