என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
பெசன்ட்நகர் வேளாங்கண்ணி மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்30 Aug 2017 3:26 AM GMT (Updated: 30 Aug 2017 3:26 AM GMT)
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங் கண்ணி மாதா திருத்தலத்தின் 45-வது ஆண்டு திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சென்னை பெசன்ட்நகர் புனித வேளாங்கண்ணி மாதா திருத்தலத்தின் 45-வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முதன்மை குரு எம்.அருள்ராஜ் தலைமையில் திரளான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று மாலை 5.45 மணிக்கு நடந்தது.
விழா நடைபெறும் 11 நாட்களும் காலை, மாலையில் திருப்பலி நடைபெற உள்ளது. 7-ந்தேதி காலை 9 மணிக்கு கீழ்ப்பாக்கம் பங்குத்தந்தை நம்பிக்கை நாநன் தலைமையிலும், மதியம் 12 மணிக்கு சாந்தோம் பேராலய அதிபர்-பங்குத்தந்தை லூயிஸ் மத்தியாஸ் தலைமையிலும் நடக்கிறது.
அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு சென்னை- மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் மாதா தேர்பவனி ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கி பெசன்ட்நகரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பவனி செல்கிறது. 8-ந்தேதி மாதா பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தலத்தின் அதிபரும், பங்குதந்தையுமான பி.கே.பிரான்சிஸ் சேவியர் மேற்கொண்டுள்ளார்.
இங்கு பழைய திருத்தல ஆலயத்தை இடித்துவிட்டு, புதிய திருத்தல ஆலயம் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
விழா நடைபெறும் 11 நாட்களும் காலை, மாலையில் திருப்பலி நடைபெற உள்ளது. 7-ந்தேதி காலை 9 மணிக்கு கீழ்ப்பாக்கம் பங்குத்தந்தை நம்பிக்கை நாநன் தலைமையிலும், மதியம் 12 மணிக்கு சாந்தோம் பேராலய அதிபர்-பங்குத்தந்தை லூயிஸ் மத்தியாஸ் தலைமையிலும் நடக்கிறது.
அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு சென்னை- மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் மாதா தேர்பவனி ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கி பெசன்ட்நகரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பவனி செல்கிறது. 8-ந்தேதி மாதா பிறந்தநாள் விழா கொண்டாட்டத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தலத்தின் அதிபரும், பங்குதந்தையுமான பி.கே.பிரான்சிஸ் சேவியர் மேற்கொண்டுள்ளார்.
இங்கு பழைய திருத்தல ஆலயத்தை இடித்துவிட்டு, புதிய திருத்தல ஆலயம் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X