என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்12 Jun 2017 4:44 AM GMT (Updated: 12 Jun 2017 4:44 AM GMT)
கோவை புலியகுளத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கோவை புலியகுளத்தில் பிரசித்தி பெற்ற புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். அதன்படி ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்து டன் தொடங்கியது. இதையொட்டி காலை 8 மணிக்கு திருப்பலி, கொடியேற்று விழா நடைபெற்றது. கோவை மறைமாவட்ட முதன்மை குரு ஜான்ஜோசப் ஸ்தனிஸ் கொடியேற்றி வைத்தார்.
பங்கு குரு ஜார்ஜ்தனசேகர் முன்னிலை வகித்தார். விழாவில், கோவை நகரம் மற்றும் மாவட்டம் முழுவதிலும் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (திங்கட்கிழமை) 8-ம் நாள் நவநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 6 மணி மற்றும் மாலை 6 மணிக்கு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) புனித அந்தோணியார் திருநாள் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வருகிற 17-ந் தேதி திருப்பலி, புதுநன்மை, உறுதி பூசுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு நடை பெறும் இந்த நிகழ்ச்சிகளில் கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கலந்து கொள்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 8 மணிக்கு கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது.
திருவிழாவையொட்டி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணி, 7.30 மணி, 11.30 மணி, மாலை 6 மணிக்கு திருப்பலி, நவநாள் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11 மணிக்கு சுகமளிக்கும் திருப்பலி, 11.30 மணிக்கு சுகமளிக்கும் ஆராதனை நிகழ்ச்சி நடக்கிறது.
பங்கு குரு ஜார்ஜ்தனசேகர் முன்னிலை வகித்தார். விழாவில், கோவை நகரம் மற்றும் மாவட்டம் முழுவதிலும் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (திங்கட்கிழமை) 8-ம் நாள் நவநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 6 மணி மற்றும் மாலை 6 மணிக்கு திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) புனித அந்தோணியார் திருநாள் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வருகிற 17-ந் தேதி திருப்பலி, புதுநன்மை, உறுதி பூசுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு நடை பெறும் இந்த நிகழ்ச்சிகளில் கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கலந்து கொள்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா வருகிற 18-ந்தேதி நடைபெறுகிறது. அன்று காலை 8 மணிக்கு கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது.
திருவிழாவையொட்டி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் காலை 6 மணி, 7.30 மணி, 11.30 மணி, மாலை 6 மணிக்கு திருப்பலி, நவநாள் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காலை 11 மணிக்கு சுகமளிக்கும் திருப்பலி, 11.30 மணிக்கு சுகமளிக்கும் ஆராதனை நிகழ்ச்சி நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X