என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    புனித அருளானந்தர் ஆலயத்தில் சப்பர பவனி நடந்த போது எடுத்த படம்.
    X
    புனித அருளானந்தர் ஆலயத்தில் சப்பர பவனி நடந்த போது எடுத்த படம்.

    ஓரியூரில் புனித அருளானந்தர் ஆலய சப்பர பவனி

    ஓரியூரில் புனித அருளானந்தர் ஆலய சப்பர பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    திருவாடானை தாலுகா ஓரியூரில் புனித அருளானந்தர் ஆலயத்தில் மறைசாட்சி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற்றது. தினமும் மாலையில் அருட் தந்தையர்களால் நவநாள் திருப்பலி, மறையுரை நிகழ்த்தப்பட்டது.

    திருவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலியை அருட்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் தலைமையில் அருட் தந்தையர்கள் நிறைவேற்றினர்.அருட்தந்தை அருள் மறையுரை நிகழ்த்தினார்.

    சப்பர பவனியை அருட்தந்தை பெலிக்ஸ் அர்ச்சித்து தொடங்கி வைத்தார். மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் புனித அருளானந்தர், ஆரோக்கியமாதா ஆகியோர் பவனியாக வந்து பக்தர்களுக்கு ஆசீர் வழங்கினர். இதில் தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி இயேசு சபை குருக்கள் மற்றும் ஓரியூர் புனித அருளானந்தர் திருத்தல அருட்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் திண்டுக்கல் மாவட்டம் என்.பஞ்சம்பட்டியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித அருளானந்தரின் சொரூபம் தாங்கிய தேருடன் பாதயாத்திரையாக வந்து திருவிழாவில் கலந்து கொண்டனர்.விழா நிறைவாக ஓரியூர் திருத்தல அதிபர் அருட்தந்தை ஆல்பர்ட் முத்துமாலை தலைமையில் கொடியிறக்கம் நடைபெற்றது.
    Next Story
    ×