என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிறித்தவம்
X
காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலய திருவிழா
Byமாலை மலர்3 Jan 2022 4:00 AM GMT (Updated: 3 Jan 2022 4:00 AM GMT)
காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலய திருவிழா நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
காயல்பட்டினம் கொம்புத்துறையில் பழமை வாய்ந்த புனித முடியப்பர் ஆலயத்தின் 477-வது ஆண்டு பெருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு இருதயராஜ் அடிகளார் கொடியேற்றி திருப்பலி நடத்தினார். அன்று இரவு 12 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. 9-ம் திருநாளான 1-ந் தேதி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காலையில் புத்தாண்டு திருப்பலியினை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை நிறைவேற்றினார். மாலையில் ஆராதனையையும் அவர் நடத்தினார். தொடர்ந்து இரவு புனித முடியப்பர் சப்பர பவனி நடைபெற்றது.
நேற்று காலை 7 மணிக்கு சேலம் மாவட்டத்தின் முன்னாள் ஆயர் சிங்கராயன் ஆண்டகை கலந்து கொண்டு திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினார். இதில் சிறுவர், சிறுமியர் முதல்முறையாக நற்கருணையை உட்கொள்ளுதல் மற்றும் உறுதிப்பூசுதல் பெறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுமார் 75-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்குபெற்றனர். காலையில் இருந்து மாலை வரை தொடர் திருப்பலிகள் நடைபெற்றது.
ஆறுமுகநேரி பங்கு மக்களுக்காக அலாய்சியஸ் அடிகளார், சிங்கித்துறை மக்களுக்காக சில்வெஸ்டர் அடிகளார், தூத்துக்குடி குரும்பூர் பங்கு மக்களுக்காக பபிஸ்டன் அடிகளார், பழையகாயல் பங்கு மக்களுக்காக அமுதன் அடிகளார், புன்னக்காயல் பங்கு மக்களுக்காக புன்னக்காயல் பங்குத்தந்தை பிராங்கிளின் அடிகளார் மற்றும் துணை பங்குத்தந்தை சுதர்ஸன் அடிகளாரும் நிறைவேற்றினர்.
மாலை 4 மணிக்கு வீரபாண்டியன்பட்டணம் பங்கு மக்களுக்காக பங்குத்தந்தை கிருபாகரன் அடிகளார், உதவி பங்குத்தந்தை பனிமயம் அடிகளார் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர்.
தொடர்ந்து ஆலந்தலை அமலிநகர் மக்களுக்காக ஜெயக்குமார் அடிகளார் மற்றும் ரவிந்திரன் அடிகளாரும் நிறைவேற்றினார்கள். விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிரதிஷ் அடிகளார், ஊர் கமிட்டி தலைவர் மரியநாயகம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தொடர்ந்து தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. 9-ம் திருநாளான 1-ந் தேதி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காலையில் புத்தாண்டு திருப்பலியினை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை நிறைவேற்றினார். மாலையில் ஆராதனையையும் அவர் நடத்தினார். தொடர்ந்து இரவு புனித முடியப்பர் சப்பர பவனி நடைபெற்றது.
நேற்று காலை 7 மணிக்கு சேலம் மாவட்டத்தின் முன்னாள் ஆயர் சிங்கராயன் ஆண்டகை கலந்து கொண்டு திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினார். இதில் சிறுவர், சிறுமியர் முதல்முறையாக நற்கருணையை உட்கொள்ளுதல் மற்றும் உறுதிப்பூசுதல் பெறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுமார் 75-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்குபெற்றனர். காலையில் இருந்து மாலை வரை தொடர் திருப்பலிகள் நடைபெற்றது.
ஆறுமுகநேரி பங்கு மக்களுக்காக அலாய்சியஸ் அடிகளார், சிங்கித்துறை மக்களுக்காக சில்வெஸ்டர் அடிகளார், தூத்துக்குடி குரும்பூர் பங்கு மக்களுக்காக பபிஸ்டன் அடிகளார், பழையகாயல் பங்கு மக்களுக்காக அமுதன் அடிகளார், புன்னக்காயல் பங்கு மக்களுக்காக புன்னக்காயல் பங்குத்தந்தை பிராங்கிளின் அடிகளார் மற்றும் துணை பங்குத்தந்தை சுதர்ஸன் அடிகளாரும் நிறைவேற்றினர்.
மாலை 4 மணிக்கு வீரபாண்டியன்பட்டணம் பங்கு மக்களுக்காக பங்குத்தந்தை கிருபாகரன் அடிகளார், உதவி பங்குத்தந்தை பனிமயம் அடிகளார் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர்.
தொடர்ந்து ஆலந்தலை அமலிநகர் மக்களுக்காக ஜெயக்குமார் அடிகளார் மற்றும் ரவிந்திரன் அடிகளாரும் நிறைவேற்றினார்கள். விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிரதிஷ் அடிகளார், ஊர் கமிட்டி தலைவர் மரியநாயகம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X