search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தூத்துக்குடி அருகே தருவைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா
    X
    தூத்துக்குடி அருகே தருவைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா

    தூத்துக்குடி அருகே தருவைகுளம் மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா

    தூத்துக்குடி அருகே தருவைகுளம் அதிதூதா் மிக்கேல் ஆலய பெருவிழாவை முன்னிட்டு தினமும் காலை திருப்பலியும், மாலை ஆராதனை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது.
    தூத்துக்குடி அருகே தருவைகுளம் அதிதூதா் மிக்கேல் ஆலய பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற திருப்பலிக்கு சிறுமலர் குருமடம் சகாயஜோசப் தலைமை தாங்கினார். அழகப்பபுரம் உதவி பங்குதந்தை நிலவன் முன்னிலை வகித்தார். தென்மண்டல பள்ளிகளின் கண்காணிப்பாளா் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பங்கு தந்தை வின்சென்ட் ஆகியோர் மறையுரையாற்றினர். விழாவில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், மாலை ஆராதனை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. முக்கிய நிகழ்வான 9-ம் திருவிழா அன்று தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் மாலை ஆராதனை நடக்கிறது. 10-ம் திருவிழா அன்று காலையில் தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீா் செல்வம் தலைமையில் மண்ணின் மைந்தா் குருக்கள் திருப்பலி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை வின்சென்ட், உதவி பங்குத்தந்தை மார்ட்டின் மற்றும் பங்கு மக்கள் செய்து இருந்தனர்.
    Next Story
    ×