search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பாளையங்கோட்டையில் சவேரியார் பேராலய தேர் பவனி
    X
    பாளையங்கோட்டையில் சவேரியார் பேராலய தேர் பவனி

    பாளையங்கோட்டையில் சவேரியார் பேராலய தேர் பவனி

    பாளையங்கோட்டையில் சவேரியார் பேராலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சவேரியாரின் திருவுருவப்பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சவேரியார் எழுந்தருளினார்.
    பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலய பெருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் திருப்பலி, மறையுரை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சவேரியாரின் திருவுருவப்பவனி நேற்று இரவு நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சவேரியார் எழுந்தருளினார்.

    அந்த தேர் தெற்கு பஜார், ராஜகோபாலசாமி கோவில், வடக்கு, கீழரதவீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இந்த தேரின் முன்பாக இறை மக்கள் ஊர்வலமாக சென்றனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி மற்றும் புதுநன்மை விழா நடைபெறுகிறது. மாலையில் கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×