search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித பெரிய நாயகி அன்னை ஆலயத்திற்கு கிறிஸ்தவர்கள் நடைபயணம்
    X
    புனித பெரிய நாயகி அன்னை ஆலயத்திற்கு கிறிஸ்தவர்கள் நடைபயணம்

    புனித பெரிய நாயகி அன்னை ஆலயத்திற்கு கிறிஸ்தவர்கள் நடைபயணம்

    விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பத்தில் உள்ள புனித பெரிய நாயகி அன்னை ஆலயத்திற்கு கிறிஸ்தவர்கள் நடைபயணம் மேற்கொண்டனர்.
    விருத்தாசலம் அடுத்த கோணாங்குப்பத்தில் புனித பெரிய நாயகி அன்னை ஆலயம் உள்ளது. அக்டோபர் மாதல் முதல் சனிக்கிழமையையொட்டி அன்னைக்கு நன்றியறிதலாகவும், அன்னையை போற்றும் விதமாகவும், அன்னையின் பெருமையை அகிலமும் அறிந்து கொள்ளும் விதமாகவும், தொழில் முன்னேற்றத்திற்காகவும், நாடு நலம் பெற வேண்டியும், உளுந்தூர்பேட்டை குழந்தை ஏசு ஆலயத்தில் இருந்து மங்கலம்பேட்டை, காட்டுப்பரூர், கர்னத்தம் வழியாக ஏராளமான கிறிஸ்தவர்கள் கோணாங்குப்பம் புனித பெரிய நாயகி அன்னை ஆலயத்துக்கு நடைபயணமாக வந்தனர். இவர்களை கோணாங்குப்பம் புனித பெரிய நாயகி அன்னை ஆலய பங்குத்தந்தை தேவ சகாயராஜ், உதவி பங்குத்தந்தை அலெக்ஸ் ஒளில் குமார் ஆகியோர் வரவேற்றனர்.

    மேலும் கோணாங்குப்பம் பங்கு மக்கள் ஆரத்தி எடுத்து அவர்களை வரவேற்றனர். இதைத்தொடர்ந்து ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதில் மறைவட்ட முதன்மை குரு அருட்பணி ரட்சகர், அருட்பணி டாக்டர் திசை ஜெரி, திருத்தல அதிபர்கள் மற்றும் அருட்பணி பிச்சைமுத்து, அருட்பணி எஸ்.அப்போலின், மறைமாவட்ட, மறைவட்ட குருக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து முழு இரவு செப நற்செய்தியை அருட்பணி கே. ஏ. இயேசு நசரேன் வழங்கினார்.
    Next Story
    ×