என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
அற்புத ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்30 Aug 2019 3:27 AM GMT (Updated: 30 Aug 2019 3:27 AM GMT)
சேலம் சாமிநாதபுரம் பகுதியில் அற்புத ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சேலம் சாமிநாதபுரம் பகுதியில் அற்புத ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற விழாவுக்கு சேலம் மறைவட்ட முதன்மை குரு அருளப்பன் தலைமை தாங்கினார்.
பின்னர், அவர் ஆலயத்தின் முன்பு திருக்கொடியை ஏற்றி வைத்து பெருவிழாவை தொடங்கி வைத்தார். சேலம் குழந்தை ஏசு பேராலயத்தின் பங்கு தந்தை ஜான் ஜோசப் முன்னிலை வகித்தார். இதையடுத்து நவநாள் திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு மற்றும் பங்கு ஆலோசனைக்குழுவினர் செய்திருந்தனர்.
திருவிழாவை முன்னிட்டு வருகிற 7-ந் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு சிறு தேர்பவனி ஊர்வலம் மற்றும் நவநாள் திருப்பலியும், 8-ந் தேதி மாலை 6 மணிக்கு கூட்டு திருப்பலி மற்றும் அன்னையின் ஆடம்பர தேர்பவனியும், 9-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நன்றி திருப்பலி மற்றும் கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
பின்னர், அவர் ஆலயத்தின் முன்பு திருக்கொடியை ஏற்றி வைத்து பெருவிழாவை தொடங்கி வைத்தார். சேலம் குழந்தை ஏசு பேராலயத்தின் பங்கு தந்தை ஜான் ஜோசப் முன்னிலை வகித்தார். இதையடுத்து நவநாள் திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு மற்றும் பங்கு ஆலோசனைக்குழுவினர் செய்திருந்தனர்.
திருவிழாவை முன்னிட்டு வருகிற 7-ந் தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு சிறு தேர்பவனி ஊர்வலம் மற்றும் நவநாள் திருப்பலியும், 8-ந் தேதி மாலை 6 மணிக்கு கூட்டு திருப்பலி மற்றும் அன்னையின் ஆடம்பர தேர்பவனியும், 9-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நன்றி திருப்பலி மற்றும் கொடி இறக்கம் நிகழ்ச்சியும் நடக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X