search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தூய செல்வநாயகி ஆலய தேர் பவனி
    X

    தூய செல்வநாயகி ஆலய தேர் பவனி

    எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசை தூய செல்வநாயகி ஆலய திருவிழா நடந்தது. இதையொட்டி ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது.
    எடப்பாடியை அடுத்த வெள்ளாண்டிவலசை தூய செல்வநாயகி ஆலய திருவிழா நடந்தது. இதையொட்டி ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உலகமீட்பர், அருளப்பர், ஜெபஸ்தியர், தூயசெல்வநாயகி சொரூபங்கள் வைக்கப்பட்டு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மேளதாளம் முழங்க ஆலயத்தை சுற்றி ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்தின் முன்பு வாணவேடிக்கை நடத்தப்பட்டது. தேருடன் திரளான கிறிஸ்தவர்கள் பாடல்களை பாடியவாறு வந்தனர். இதைத்தொடர்ந்து சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயர் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடத்தப்பட்டது.
    Next Story
    ×