என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பெரம்பூர் தூய லூர்து அன்னை ஆண்டு விழா இன்று தொடங்குகிறது
    X

    பெரம்பூர் தூய லூர்து அன்னை ஆண்டு விழா இன்று தொடங்குகிறது

    பெரம்பூரில் உள்ள தூய லூர்து அன்னை தேவாலயத்தின் 118-வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.
    சென்னை பெரம்பூரில் தூய லூர்து அன்னை தேவாலயத்தின் 118-வது ஆண்டு பெருவிழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி, வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. இன்று மாலை 6 மணியளவில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயர் கலந்துகொண்டு கொடியேற்றி வைக்கிறார்.

    தினமும் சிறப்பு திருப்பலி நடக்கிறது. இதில் சென்னை- மயிலை மறை மாவட்ட முதன்மை குரு எம்.அருள்ராஜ், செங்கல்பட்டு மறை மாவட்ட முதன்மை குரு பாக்கிய ரெஜிஸ், புதுச்சேரி-கடலூர் உயர் மறை மாவட்ட கல்வி ஆணைக்குழு செயலாளர் ஜோசப்ராஜ், சென்னை-மயிலை மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    வேலூர் மறை மாவட்ட ஆயர் சவுந்தரராஜன் தலைமையில் 10-ந் தேதி நற்கருணை பவனியுடன் விழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×