என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாகர்கோவில் வேதநகர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய குடும்ப பெருவிழா கொடியேற்றம் நேற்று நடந்த போது எடுத்த படம்.
    X
    நாகர்கோவில் வேதநகர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய குடும்ப பெருவிழா கொடியேற்றம் நேற்று நடந்த போது எடுத்த படம்.

    வேதநகர் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய குடும்ப பெருவிழா தொடங்கியது

    வேதநகர் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய குடும்ப பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    வேதநகர் தூய மிக்கேல் அதிதூதர் ஆலய குடும்ப பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி ஆக்டோபர் 1-ந் தேதி வரை நடக்கிறது. விழாவில் நேற்று மாலை 4.30 மணிக்கு குருசடிகள் தரிசனம், 6 மணிக்கு ஜெபமாலையும், அருட்பணியாளர் ஜான்சன் கொடியேற்றினர். தொடர்ந்து திருப்பலி, இரவு அன்பியங்களின் ஆண்டு விழா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலியும் நடக்கிறது. 2-ம் நாள் இரவு மறைமாவட்ட இயக்குனர் மைக்கேல் ராஜ் தலைமையில் கிராம முன்னேற்ற சங்க ஆண்டுவிழா, 3-ம் நாள் காலை 7 மணிக்கு திருப்பலி, இரவு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடக்கிறது.

    30-ந் தேதி காலை 7 மணிக்கு மறை மாவட்ட முதன்மை பணியாளர் சாலமோன் தலைமையில் முதல் திருவிருந்து பெருவிழா, மாலை 6 மணிக்கு ஆடம்பர மாலை திருப்புகழ், நற்கருணை ஆசீர், இரவு 8.30 மணிக்கு தேர்பவனி, 1-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு முதல் திருப்பலி, 7.30 மணிக்கு ஆடம்பர திருவிழா திருப்பலி நடக்கிறது.

    இதற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்துகிறார். மதியம் 2 மணிக்கு அலங்கார தேர்பவனி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 8.30 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு அருட்பணிப்பேரவை, நிதிக்குழு, பங்கு பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×