என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா தொடங்கியது
    X

    புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா தொடங்கியது

    மேலப்பாளையம் சேவியர் காலனி தொம்மைமிக்கேல்புரத்தில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    மேலப்பாளையம் சேவியர் காலனி தொம்மைமிக்கேல்புரத்தில் புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் சிறப்பு திருப்பலி, மறையுரை ஆகியவை நடக்கிறது. வருகிற 24-ந் தேதி சிறப்பு தியான நிகழ்ச்சியும், 28-ந் தேதி மாலை ஆலய வளாகத்தில் அசன விருந்தும் நடக்கிறது. 29-ந் தேதி புதுநன்மை விழா மற்றும் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    ஏற்பாடுகளை புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்கு தந்தை அந்தோணி சேவியர் மற்றும் ஆலய குழுவினர் செய்துள்ளனர்.
    Next Story
    ×