என் மலர்
ஆன்மிகம்

புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் உள்ள முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் உள்ள முத்தழகுபட்டி புனித செபஸ்தியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக நேற்று காலை 5.30 மணிக்கு கொடியேற்ற திருப்பலி நடந்தது. இதையடுத்து மதியம் 12 மணி அளவில் நாட்டாண்மை வில்லியம் ஜெயபால் தலைமையில் ஊர் பொதுமக்கள் சார்பில் கொடியேற்றம் நடந்தது. இதில், பங்குத்தந்தை ஜான்போஸ்கோ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) புனிதர்களின் மின்தேர் பவனி நடைபெறும். இதையடுத்து நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணி முதல் நாளை மறுநாள் (புதன்கிழமை) மதியம் 2 மணி வரை அன்னதானம் நடைபெற உள்ளது.
முன்னதாக நேற்று காலை 5.30 மணிக்கு கொடியேற்ற திருப்பலி நடந்தது. இதையடுத்து மதியம் 12 மணி அளவில் நாட்டாண்மை வில்லியம் ஜெயபால் தலைமையில் ஊர் பொதுமக்கள் சார்பில் கொடியேற்றம் நடந்தது. இதில், பங்குத்தந்தை ஜான்போஸ்கோ உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி இன்று (திங்கட்கிழமை) புனிதர்களின் மின்தேர் பவனி நடைபெறும். இதையடுத்து நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணி முதல் நாளை மறுநாள் (புதன்கிழமை) மதியம் 2 மணி வரை அன்னதானம் நடைபெற உள்ளது.
Next Story






