என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
கோவளம் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலயத்தில் தேர்ப்பவனி
Byமாலை மலர்31 July 2017 3:23 AM GMT (Updated: 31 July 2017 3:23 AM GMT)
கோவளம் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலய திருவிழாவில் நேற்று தேர்ப்பவனி நடந்தது. இதில் திரளான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி அருகே கோவளத்தில் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் நூற்றாண்டுவிழா மற்றும் பங்கு குடும்பவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடந்தன.
திருவிழாவின் 9-வது நாளான நேற்று முன்தினம் காலையில் திருவிழா திருப்பலி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருச்சி தூய பவுல் குருத்துவ கல்லூரி பேராசிரியர் சேவியர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரை நிகழ்த்தினார். மாலையில் ஜெபமாலையும், ஆராதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்தினார்.
10-ம் திருவிழாவான நேற்று தேர்ப்பவனி நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு சிறப்புத்திருப்பலியும், காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியும் நடந்தது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார். காலை 10 மணிக்கு புனிதரின் தேர்ப்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவளம் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலய பங்குத்தந்தை பிரபுதாஸ் மற்றும் பங்கு பேரவையினர், பங்குமக்கள் செய்திருந்தனர்.
திருவிழாவின் 9-வது நாளான நேற்று முன்தினம் காலையில் திருவிழா திருப்பலி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருச்சி தூய பவுல் குருத்துவ கல்லூரி பேராசிரியர் சேவியர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரை நிகழ்த்தினார். மாலையில் ஜெபமாலையும், ஆராதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்தினார்.
10-ம் திருவிழாவான நேற்று தேர்ப்பவனி நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு சிறப்புத்திருப்பலியும், காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியும் நடந்தது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார். காலை 10 மணிக்கு புனிதரின் தேர்ப்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவளம் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலய பங்குத்தந்தை பிரபுதாஸ் மற்றும் பங்கு பேரவையினர், பங்குமக்கள் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X