search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோவளம் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலய திருவிழாவில் தேர்ப்பவனி நடந்த போது எடுத்த படம்.
    X
    கோவளம் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலய திருவிழாவில் தேர்ப்பவனி நடந்த போது எடுத்த படம்.

    கோவளம் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலயத்தில் தேர்ப்பவனி

    கோவளம் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலய திருவிழாவில் நேற்று தேர்ப்பவனி நடந்தது. இதில் திரளான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
    கன்னியாகுமரி அருகே கோவளத்தில் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் நூற்றாண்டுவிழா மற்றும் பங்கு குடும்பவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் திருப்பலி, மறையுரை, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடந்தன.

    திருவிழாவின் 9-வது நாளான நேற்று முன்தினம் காலையில் திருவிழா திருப்பலி நடந்தது. நிகழ்ச்சிக்கு திருச்சி தூய பவுல் குருத்துவ கல்லூரி பேராசிரியர் சேவியர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரை நிகழ்த்தினார். மாலையில் ஜெபமாலையும், ஆராதனையும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி மறையுரை நிகழ்த்தினார்.

    10-ம் திருவிழாவான நேற்று தேர்ப்பவனி நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு சிறப்புத்திருப்பலியும், காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியும் நடந்தது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார். காலை 10 மணிக்கு புனிதரின் தேர்ப்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவளம் புனித லொயோலா இஞ்ஞாசியார் ஆலய பங்குத்தந்தை பிரபுதாஸ் மற்றும் பங்கு பேரவையினர், பங்குமக்கள் செய்திருந்தனர்.
    Next Story
    ×