என் மலர்
ஆன்மிகம்

கோட்டப்பாளையம் புனித மரிய மதலேனாள் ஆலய தேர்பவனி நடந்தது
உப்பிலியபுரம் அருகே உள்ள கோட்டப்பாளையம் புனித மரிய மதலேனாள் ஆலய ஆண்டு பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது.
உப்பிலியபுரம் அருகே உள்ள கோட்டப்பாளையம் புனித மரிய மதலேனாள் ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக காலையில் மலையடி திருப்பலியை மிக்கேல்பட்டி மறைவட்ட முதன்மை குரு ஜெ.அந்தோணி ஜோசப் நடத்தி மறையுரை வழங்கினார்.
பின்னர் திருவிழா சிறப்பு திருப்பலியினை லால்குடி மறைவட்ட முதன்மை குரு எம்.ஏ.தனராஜ் நடத்தி மறையுரை வழங்கினார். இதையடுத்து சிலுவைகிரி பங்குத்தந்தை கிருபாகரன் திருப்பலி நடத்தி மறையுரை வழங்கினார். மாலையில் பெரிய தேர் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் திருவிழா சிறப்பு திருப்பலியினை லால்குடி மறைவட்ட முதன்மை குரு எம்.ஏ.தனராஜ் நடத்தி மறையுரை வழங்கினார். இதையடுத்து சிலுவைகிரி பங்குத்தந்தை கிருபாகரன் திருப்பலி நடத்தி மறையுரை வழங்கினார். மாலையில் பெரிய தேர் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






