என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    புனித தோமையார் ஆலய திருவிழா: அலங்கார மின் தேர்பவனி
    X

    புனித தோமையார் ஆலய திருவிழா: அலங்கார மின் தேர்பவனி

    வத்தலக்குண்டு புனித தோமையார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தோமையார் உருவச்சிலையுடன் மின் அலங்கார தேர்பவனி நடந்தது.
    வத்தலக்குண்டு புனித தோமையார் ஆலய திருவிழா நடந்தது. வட்டார பங்கு தந்தை சேவியர், மதுரை மறை மாவட்ட முதன்மை குரு ஜெயராஜ் ஆகியோர் சிறப்பு திருப்பலியை நடத்தினர். இதைத்தொடர்ந்து தோமையார் உருவச்சிலையுடன் மின் அலங்கார தேர்பவனி நடந்தது.

    ஆலயத்தில் தொடங்கிய தேர்பவனி கடைவீதி, மெயின்ரோடு வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.
    Next Story
    ×