என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தாடிக்கொம்பு அருகே புனித சலேத் மாதா ஆலய திருவிழா
    X

    தாடிக்கொம்பு அருகே புனித சலேத் மாதா ஆலய திருவிழா

    தாடிக்கொம்பு அருகே மறவபட்டிபுதூர் புனித சலேத் மாதா ஆலய திருவிழாவில் பக்தர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி முழங்காலிட்டு நடந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
    தாடிக்கொம்பு அருகே மறவபட்டிபுதூரில் பழமை வாய்ந்த புனித சலேத் மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 132-வது ஆண்டு திருவிழா, கடந்த 13-ந் தேதி கொடி ஊர்வலம் மற்றும் திருப்பலியுடன் தொடங்கியது. 21-ந் தேதி இரவு 8 மணிக்கு கொடியேற்ற திருப்பலி நடைபெற்றது.

    இந்த திருப்பலியினை மாரம்பாடி மறைவட்ட அதிபர் சாம்சன் அடிகளார் தலைமையிலான குருக்கள் நிறைவேற்றினர். பின்னர் அன்னையின் திருஉருவ ஆடம்பர கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்றம் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மறவபட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த மக்கள் காணிக்கை அழைப்பினை தொடர்ந்து புனித சலேத் மாதா, புனித பெரிய அந்தோணியார் உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் மின்ரதங்களில் எழுந்தேற்றம் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தேரடித் திருப்பலி, அனுமந்தராயன்கோட்டை மறைவட்ட அதிபர் ஏர்னஸ்ட் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து மின்ரதங்களில் புனித சலேத் மாதா உள்ளிட்ட புனிதர்களின் சொரூபங்கள் எழுந்தேற்றம் செய்யப்பட்டு மின்தேர் ஊர்வலமும், வாணவேடிக்கையும் நடைபெற்றது.

    நேற்று மாலை 3 மணிக்கு அன்னையின் பெரிய தேர்ப்பவனி நடைபெற்றது. இறுதியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி, முழங்காலிட்டு புனித சலேத் மாதா எழுந்தருளிய சப்பரத்தை சுற்றி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    விழா ஏற்பாடுகளை ஊர் நாட்டாமை உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஊர் பொது மக்கள் செய்தனர்.
    Next Story
    ×