என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
காவல்கிணறு தூய உபகார மாதா ஆலய திருவிழா 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
Byமாலை மலர்12 May 2017 3:07 AM GMT (Updated: 12 May 2017 3:07 AM GMT)
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு தூய உபகார மாதா ஆலய திருவிழா வருகிற 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு தூய உபகார மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா வருகிற 15-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மணப்பாடு பங்குதந்தை தியோபிலஸ் அடிகள் தலைமையில் கொடியேற்றம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு திருயாத்திரை மற்றும் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் நற்கருணை ஆசீரும், இரவு 10 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
8-ம் திருவிழாவான 22-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் திருப்பலியில் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. இரவு நற்கருணை பவனி நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவான 23-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில், உபகார அன்னையின் பெருவிழா ஆடம்பர மாலை ஆராதனை நடக்கிறது.
தொடர்ந்து இரவு 10 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. 10-ம் திருவிழாவான 24-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா ஆடம்பர பாடல், திருப்பலி மற்றும் உறுதி பூசுதல் அருள் விழாவும் நடக்கிறது.
மாலை 3 மணிக்கு தேர்பவனியும், 6.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் நற்கருணை ஆசீரும், இரவு 10 மணிக்கு கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. 11-ம் திருவிழாவான 25-ந் தேதி மாலை 6 மணிக்கு பொது அசனம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குகுரு எஸ்.மைக்கிள் மகிழன் அடிகள் மற்றும் சபை மக்கள் உள்பட பலர் செய்து வருகின்றனர்.
8-ம் திருவிழாவான 22-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெறும் திருப்பலியில் சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. இரவு நற்கருணை பவனி நடைபெறுகிறது. 9-ம் திருவிழாவான 23-ந் தேதி மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில், உபகார அன்னையின் பெருவிழா ஆடம்பர மாலை ஆராதனை நடக்கிறது.
தொடர்ந்து இரவு 10 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. 10-ம் திருவிழாவான 24-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா ஆடம்பர பாடல், திருப்பலி மற்றும் உறுதி பூசுதல் அருள் விழாவும் நடக்கிறது.
மாலை 3 மணிக்கு தேர்பவனியும், 6.30 மணிக்கு ஜெபமாலை மற்றும் நற்கருணை ஆசீரும், இரவு 10 மணிக்கு கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. 11-ம் திருவிழாவான 25-ந் தேதி மாலை 6 மணிக்கு பொது அசனம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை பங்குகுரு எஸ்.மைக்கிள் மகிழன் அடிகள் மற்றும் சபை மக்கள் உள்பட பலர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X