என் மலர்
ஆன்மிக களஞ்சியம்

விநாயகர் சதுர்த்தி பூஜை முறை
- மாவிலை தோரணம் கட்டி வீட்டை மங்களகரமாக மாற்ற வேண்டும்.
- பூஜை அறையின் நடுவில் மனைப்பலகை போட்டு அதில் விநாயகர் படம் வைத்து, அதில் அருகம்புல் மாலை சூட்ட வேண்டும்.
பூஜைக்கு முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து மெழுகி கோலமிட்டு அழகுப்படுத்த வேண்டும்.
கோலம் போடும் போது புள்ளிக் கோலம், பின்னல் கோலம் இன்றி பூக்கோலம் போடுவது நல்லது.
மாவிலை தோரணம் கட்டி வீட்டை மங்களகரமாக மாற்ற வேண்டும்.
பூஜை அறையின் நடுவில் மனைப்பலகை போட்டு அதில் விநாயகர் படம் வைத்து, அதில் அருகம்புல் மாலை சூட்ட வேண்டும்.
அருகில் 5 முக குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
5 வகை பூக்கள், 5 வகை நறுமணப் பொருட்கள், 5 வகை பழங்கள் படைக்க வேண்டும்.
அத்துடன் அவல், பொரி, கடலை, கொழுக்கட்டை, மோதகம், அப்பம், சுண்டல், தாம்பூலம் ஆகியவற்றை வைத்து தீபம் காட்டி வழிபட வேண்டும்.
இவ்வாறு வழிபட வரமும் கிடைக்கும். வளமும் பெருகும்.
Next Story






