search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டி.என்.பி.எல். கிரிக்கெட்:   திண்டுக்கல் அணி வெற்றி பெற 146 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருப்பூர்
    X

     டி.என்.பி.எல். கிரிக்கெட் 

    டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் அணி வெற்றி பெற 146 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருப்பூர்

    • முதலில் விளையாடிய திருப்பூர் அணியில் அரவிந்த் 32 ரன்கள் அடித்தார்.
    • திண்டுக்கல் வீரர் சிலம்பரசன் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

    நத்தம்:

    6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் தொடக்க சுற்று ஆட்டங்கள் நெல்லையில் நடைபெற்று முடிந்தன.அடுத்த கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

    இன்று நடைபெறும் 9-வது லீக் ஆட்டத்தில் அனிருதா தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி, ஹரி நிஷாந்த் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்சை எதிர் கொண்டுள்ளது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து களம் இறங்கிய திருப்பூர் அணி தொடக்க வீரரும் கேப்டனுமான ஸ்ரீகாந்த் அனிருத்தா 8 ரன் எடுத்திருந்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் சித்தார்த் டக் அவுட்டானார்.

    அதிகபட்சமாக அந்த அணி வீரர் அரவிந்த் 32 ரன்கள் அடித்தார். மான் பாப்னா 21 ரன்களும், துஷார் ரஹேஜா 20 ரன்னும் அடித்தனர். முகமது 27 ரன்களும், அஸ்வின் 20 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்துள்ளது.

    திண்டுக்கல் அணியில் சிலம்பரசன் 3 விக்கெட்களும், ஹரி நிசாந்த் 2 விக்கெட்களும்,ரங்கராஜ் சுதேஷ் 2 விக்கெட்களும் கைப்பற்றினர். இதையடுத்து 146 ரன்கள் என்ற இலக்கை நோக்கி திண்டுக்கல் அணி விளையாட உள்ளது.

    Next Story
    ×