search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: லண்டனில் இன்று தொடங்குகிறது
    X

    2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: லண்டனில் இன்று தொடங்குகிறது

    • புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 66.67 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தையும், தொடர்ந்து இந்தியா 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.
    • போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

    லண்டன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை 2019-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது.

    இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    அந்த வகையில் 2021-ம் ஆண்டு சவுத்தம்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.

    இதைத் தொடர்ந்து 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரிய காலக்கட்டமாக 2021 முதல் 2023-ம் ஆண்டு வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் 9 அணிகள் பங்கேற்று உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் மோதின. மொத்தம் 27 தொடர்களில் 69 டெஸ்டுகள் நடத்தப்பட்டன. டெஸ்ட் வெற்றிக்கு 12 புள்ளியும், டிராவுக்கு 4 புள்ளியும் வழங்கப்பட்டன.

    இதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா 66.67 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்தையும், இந்தியா 58.80 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. 55.56 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தை பெற்ற தென்ஆப்பிரிக்கா நூலிழையில் வாய்ப்பை இழந்தது. நடப்பு சாம்பியன் நியூசிலாந்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

    Next Story
    ×