என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஒரு தோல்வியை வைத்து இந்தியாவை மதிப்பிட வேண்டாம் -  சச்சின்
    X

    சச்சின் டெண்டுல்கர்

    ஒரு தோல்வியை வைத்து இந்தியாவை மதிப்பிட வேண்டாம் - சச்சின்

    • டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வி அடைந்தது.
    • இந்த தோல்வியின் மூலம் இந்திய அணி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கர் இன்று தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் தோல்வி அடைந்தது துரதிர்ஷ்டவசமானது. இந்திய அணியின் ஆட்டம் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது என்பது எனக்குத் தெரியும்.

    நாங்கள் ஒரு நல்ல ஸ்கோரை இலக்காக வைக்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்வோம். அடிலெய்டு ஓவல் மைதானத்தில் 168 ரன்கள் போதுமானதல்ல.

    விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் நாம் தோல்வி அடைந்தோம். இது எங்களுக்கு கடினமான ஆட்டம், மோசமான மற்றும் ஏமாற்றம் தரும் தோல்வி.

    நம்பர் 1 இடத்தைப் பெறுவது என்பது ஒரே இரவில் நடக்காது. அந்த அணி குறிப்பிட்ட காலத்தில் நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும், இந்திய அணி அதைச் செய்திருக்கிறது.

    ஒரு தோல்வியின் அடிப்படையில் வைத்து இந்திய அணியை மதிப்பிட வேண்டாம். வீரர்களும் வெளியே சென்று தோல்வியடைய விரும்பவில்லை. விளையாட்டுகளில் இந்த ஏற்றத் தாழ்வுகள் உண்டு. நாம் அதில் ஒன்றாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×