என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
கேப்டன் அதிரடியில் ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை பெண்கள் அணி
- அதிரடியாக விளையாடிய சமாரி அதபத்து அரை சதம் அடித்து அசத்தினார்.
- இலங்கை கேப்டன் சமாரி அதபத்து சிறந்த வீராங்கனை விருதை தட்டி சென்றார்.
இலங்கை-இந்தியா பெண்கள் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக கேப்டன் கவூர் 39 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணியின் விஷ்மி குணரத்னே முதல் ஓவரில் வெளியேறினார். அடுத்து வந்த மாதவி 13 ரன்னில் வெளியேறினார். இந்நிலையில் கேப்டன் சமாரி அதபத்து- நிலாக்ஷி டி சில்வா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதிரடியாக விளையாடிய கேப்டன் சமாரி அதபத்து அரை சதம் அடித்து அசத்தினார். நிலாக்ஷி டி சில்வா 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் முறையில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சமாரி அதபத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 48 பந்தில் 80 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இதில் 14 பவுண்டரிகளும் 1 சிக்சரும் அடங்கும்.
17 ஓவரில் இலங்கை அணி 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இலங்கை கேப்டன் சமாரி அதபத்து சிறந்த வீராங்கனை விருதை தட்டி சென்றார். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்