என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
இந்திய பெண்கள் அணிக்கு 126 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை
- இலங்கை அணியில் அதிகப்பட்சமாக விஷ்மி குணரத்னே 45 ரன்கள் எடுத்தார்.
- இந்திய தரப்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா- இலங்கை பெண்கள் அணி டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய பெண்கள் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி இலங்கை பெண்கள் அணி வீராங்கனைகளான விஷ்மி குணரத்னே- சமாரி அதபத்து ஜோடி களமிறங்கியது. இந்த நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடியை வஸ்த்ரகர் பிரித்தார். இவர் வீசிய 13.5 ஓவரில் சமாரி அதபத்து 41 பந்தில் 43 எடுத்து அவுட் ஆனார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 87 ரன்கள் எடுத்தது.
அடுத்த சிறிது நேரத்தில் விஷ்மி 50 பந்துகளில் 45 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேறினர். மாதவி 9, கவிஷா தில்ஹாரி 2, நிலக்ஷி டி சில்வா 1, ஹசினி பெரேரா 0, ரனசிங்கே 5 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் 20 ஓவரில் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக விஷ்மி குணரத்னே 45 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் தீப்தி சர்மா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்