என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் பிரிமீயர் 'லீக்' போட்டி: டெல்லி அணி அபார வெற்றி.. பெங்களூரு அணி 163 ரன்களில் சுருண்டது..
- டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது.
- 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்தது.
முதலாவது மகளிர் பிரிமீயர் 'லீக்' 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நவி மும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடி யத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடலஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். 'லீக்' முடி வில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதி பெறும். நேற்றைய தொடக்க ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவூர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 143 ரன் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை வீழ்த்தியது.
போட்டியின் 2வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. அதன்படி இன்று மாலை 3.30 மணிக்கு மும்பை பிர போர்ன் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- மெக்லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
இதில், டெல்லி- பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தன. இதில், டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்தது. 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய களமிறங்கின.
இதில், பெங்களூரு அணி 20வது ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களில் சுருண்டது. பெங்களூரு அணியை ௬௦ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றிப் பெற்றது.






