search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கடைசி ஒரு நாள் போட்டி- இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு
    X

    கடைசி ஒரு நாள் போட்டி- இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து பந்துவீச்சு தேர்வு

    • ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
    • நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்ற இந்திய அணி ஆர்வம்.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 12 ரன் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தியா,நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது.

    போட்டி மதியம் 1.30 மணியளவில் தொடங்கவுள்ள நிலையில், டாஸ் போடப்பட்டது.

    இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதன்மூலம், முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகின்றனர்.

    இந்த ஆட்டத்திலும் நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்திய அணி இருக்கிறது.

    Next Story
    ×