search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    2-வது டி20-யில் இந்த 2 வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்- சுரேஷ் ரெய்னா
    X

    2-வது டி20-யில் இந்த 2 வீரர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்- சுரேஷ் ரெய்னா

    • விராட் கோலி 2-வது டி20 போட்டியில் விளையாடுவார்.
    • ஷிவம் துபே 4 ஓவர்கள் வீசுவது என்பது சவாலான ஒன்று.

    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று டி 20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் டி 20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி நாளை இந்தூரில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் 2-வது டி20 போட்டியில் இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட் கோலி 2-வது டி20 போட்டியில் விளையாடுவார். சிறிய மைதானம் என்பதால், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆவேஷ் கான் அணியில் இடம் பெற வேண்டும். அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் இருப்பது முக்கியம். ஏனென்றால், ஷிவம் துபே 4 ஓவர்கள் வீசுவது என்பது சவாலான ஒன்று. அதேநேரம் குல்தீப் யாதவிற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

    என்று கூறியுள்ளார்

    Next Story
    ×