search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    நிதிஷ் ரானா, ரிங்கு சிங் அபாரம் - ஐதராபாத் வெற்றிபெற 172 ரன்களை நிர்ணயித்தது கொல்கத்தா
    X

    நிதிஷ் ரானா, ரிங்கு சிங் அபாரம் - ஐதராபாத் வெற்றிபெற 172 ரன்களை நிர்ணயித்தது கொல்கத்தா

    • டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய அந்த அணி 171 ரன்களை சேர்த்தது.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கொல்கத்தா நைட் ரைட்ரஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, கொல்கத்தா அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் டக் அவுட்டானார். வெங்கடேஷ் அய்யர் 7 ரன்னிலும், ஜேசன் ராய் 20 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    கேப்டன் நிதிஷ் ரானா அதிரடியாக ஆடி 31 பந்தில் 42 ரன்னில் வெளியேறினார். ஆண்ட்ரூ ரசல் 24 ரன், சுனில் நரைன் 1 ரன், ஷர்துல் தாக்குர் 8 ரன்னிலும் வெளியேறினர்.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரிங்கு சிங் பொறுப்புடன் ஆடி 46 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை சேர்த்தது.

    இதையடுத்து, 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×